வாழ்வின் மீதான தீவிரத்தேடல் உள்ள ஒருவனுக்கு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்
அனைத்தும் அவனுடைய நிலத்தின் ஆதாரம். மேம்போக்கான ஆட்களுக்கு அவை
கடக்க இயலாத சலிப்பூட்டும் வெற்றுத் தகவல்கள்.கன்னி, கொடி, மோளை, பள்ளை,
செம்போரை என ஆட்டின் வகைகளையும் தர்ப்பை புல்லையும் இடையனையும் தேடி
அலைந்ததில் என் உடல் முழுக்க ஆட்டாம்புழுக்கை வாசம். தட்டப்பாறை நாவல் என்பது
இதுவல்ல. இதை வாசித்ததும் நீங்கள் தேடப்போகும் உங்களின் உள்மன விசாலமான
எண்ணங்கள் தான் உண்மையான “தட்டப்பாறை” நாவல்.
– முஹம்மது யூசுஃப்
Reviews
There are no reviews yet.