இத்தொகுப்பிலுள்ள கதைகள் பலவும் சிறுகதைக்கான இலக்கணத்துக்குள் பொருந்திவரக்கூடியவை. சொல்லாது மறைத்த பகுதிகளால் மேலும் கனம் கூடியவை. வெவ்வேறு புதிய நிலக்காட்சிகளையும் காடுகளின் வசீகரமான சித்திரங்களையும் கொண்டிருப்பவை. மனித வாழ்வின், உறவுகளின் தீராத புதிர்களும் அவற்றில் எஞ்சி நிற்கும் நம்பிக்கையுமே இந்தக் கதைகளுக்கு ஆதாரமாய் அமைந்திருக்கின்றன. எண்ணிக்கையிலும் எடுத்துக்கொள்ளும் களங்களிலும் சொல்கிற உத்திகளிலும் கலைச்செல்வி காட்டும் முனைப்பும் தீவிரமும் வியப்பைத் தருகின்றன. இந்த முனைப்பும் தீவிரமும் தொடரும்போது அவரது படைப்புகளின் எண்ணிக்கையும் கனமும் கூடும். வாசகர்களிடத்தில் அதிக கவனம் பெறும். தன்னை கண்டடைய எழுதிய கதைகள் பிறருக்கும் அவ்வாறே உதவிடக்கூடும். அதுவே அவரது எழுத்துக்கு அர்த்தம் சேர்க்கும்.
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்
Reviews
There are no reviews yet.